Friday, June 10, 2022

சிந்தனை ..




வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்கள் , அதை வழிகாட்டியாக மாற வழியில்லாமல் தவிக்கும் உள்ளங்கள், சிதறி போகும் சிந்தனை , உள்ளுக்குள் பொங்கி அமுங்கும் அலைகள், ஒயிவு இல்லாமல் இயங்கும் இதயம் , தயங்கி தயங்கி போராடி கலைத்து ஒரு நாள் மற்ற உள்ளங்களை  நாடி செல்கின்றது ..


அங்கேயும் ஏமாற்றம் தான் கிடைக்கிறது ..எல்லாரும் திசையறியா பறவைகளாக தன் போக்கில் பறந்து தன் லட்சியத்தை மறந்து காலம் கழித்து விடுகின்றன ...பயணம் நிரந்தரமானது  இல்லை என்று தெரிந்தும் முடிவு காண பயப்படும் மனம் அது தொடரும் என்று  வீன் கனவு கான்கிற மனம் திடிர் என்று பிரேக் அடிக்கும் போது தான் உணர்க்கிறது ...இது தான் முடிவு என்று ....


முடிவுகளை தவிர்க்க முடியாது ...ஆனால் ஆரம்பம் பலனுள்ளதாக அமைய முயற்சி செயவது தான் மனிதனின் இயற்கை  ..ஆதலால் வாழ்க்கை பயணம் சுகமாக கழிக்க பயனுள்ளதாக அமைய முயற்சி செய்யலாம்..

No comments:

Post a Comment

நேரம் நல்ல நேரம் ....

  நேரம் நல்ல நேரம்  ----------------------------- எல்லாம் வாய்த்த நேரம் ...கடவுள் கொடுத்த நேரம் ..மனிதன் தான் வினாக்குகிறான் கிடைத்த நேரம் ....